×

கஞ்சா விற்ற வாலிபர் கைது

மதுரை: தத்தனேரி மயானத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக செல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ ஜான் தலைமையில் போலீசார் மயானத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது, அங்குள்ள காளியம்மன் கோயில் அருகே பதுங்கியிருந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பிச்செல்ல முயன்றார். போலீசார் அவரை மடக்கிப்பிடித்து சோதனையிட்டபோது, அவரிடம் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர் அருள்தாஸ்புரம், பாலமுருகன் கோயில் பகுதியை சேர்ந்த கோபால் (29) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ேபாலீசார் அவரை கைது செய்ததுடன், அவரிடமிருந்த, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Walier ,Madurai ,Cellore police ,Dathaneri Mayana ,S.S. I ,John ,Dinakaran ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...